Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் ஜூலை 15ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகிறது

வரும் ஜூலை 15ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகிறது

By: Nagaraj Wed, 29 June 2022 11:55:36 PM

வரும் ஜூலை 15ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகிறது

புது தில்லி: சிபிஎஸ்இ மற்றும் சிஐஎஸ்சிஇ ஆகிய பாடத்திட்டங்களில் பயின்று தேர்வெழுதிய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

விடைத்தாள்களை மதிப்பிடும் முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புத்தேர்வு முடிவுகள் வரும் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

exam results,releases,information,general examination,score ,தேர்வு முடிவுகள், வெளியாகிறது, தகவல்கள், பொதுத்தேர்வு, மதிப்பெண்

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்று தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பதை முறைப்படி சிபிஎஸ்இ நிர்வாகமே அறிவித்தால் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இல்லாமல் மாணவ, மாணவியரால் இருக்க முடியும்.

கரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த கல்வியாண்டில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பருவத் தேர்வுகள் மூலம் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.
இதன் காரணமாக, இரண்டு பருவத் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் பள்ளிகள் வழங்கும் உள்ளீட்டு மதிப்பெண் போன்றவற்றை கணக்கிலெடுத்து அவற்றை கூட்டி ஒரே மதிப்பெண் பட்டியலில் வெளியிடுவது அல்லது இரண்டாம் பருவத் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணை தற்போது வெளியிட்டு, பள்ளிகளில் ஒன்றிணைந்த மதிப்பெண் பட்டியல் வெளியிடுவது போன்ற பல்வேறு செயல்களில் சிபிஎஸ்இ நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Tags :