நவீன நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது
By: Nagaraj Sat, 31 Dec 2022 4:55:38 PM
புதுடெல்லி: நதிகளை சுத்தம் செய்து, கழிவுநீரை கலக்காமல், அவற்றைச் சுற்றி நவீன நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
மேற்கு வங்காளத்தில் தூய்மையான கங்கை திட்டங்களைத் தொடங்கி வைத்து, பிரதமர் மோடி காணொலி மூலம் கூறியதாவது: நதிகளை சுத்தம் செய்து, கழிவுநீரை கலக்காமல், அவற்றைச் சுற்றி நவீன நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.
அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கான தேவைகளை கருத்தில் கொண்டு இவை மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 8 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் 800 கி.மீட்டருக்கும் அதிகமான மெட்ரோ ரயில்கள்
இயக்கப்படுகின்றன. விரைவில் 1,000 கி.மீ., ஆக உயர்த்தும் பணி நடந்து
வருகிறது. நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் பல்வேறு அரசு
நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது பெரும் சவாலாக உள்ளது.
ஒருங்கிணைப்பு இடைவெளியைக் குறைக்கும் நோக்கில் பிரதமரின் விரைவு மின்
திட்டம் தொடங்கப்பட்டது.
புதிய விமான நிலையங்கள், நீர்வழிகள்,
துறைமுகங்கள் மற்றும் சாலைகள் ஆகியவை பொதுமக்களுக்கு தடையற்ற போக்குவரத்து
இணைப்பை உறுதி செய்கின்றன. 21ம் நூற்றாண்டில் நமது திறமைகளை சரியாக
பயன்படுத்தி முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டும். தற்போது நாட்டில்
100க்கும் மேற்பட்ட நீர்வழிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
வர்த்தகம்
மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த, நவீன பயணக் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்பட
உள்ளன. ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது.
இந்த நம்பிக்கையைத் தக்கவைக்க ஒவ்வொரு இந்தியனும் தன் முழு பலத்துடன்
உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.