Advertisement

பிலாவலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

By: Nagaraj Sat, 17 Dec 2022 11:56:09 PM

பிலாவலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

அஜ்மீர்: ஒப்பிட்டு பேசாதீங்க... பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகனும், வெளியுறவு அமைச்சருமான பிலாவல் பூட்டோ, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

மோடியை குஜராத்தின் கசாப்புக் கடைக்காரர் என அவர் கூறியது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலாவலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பிலாவலுக்கு எதிராக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவின் ஆன்மிக தலைவரும், அகில இந்திய சுபி சஜ்ஜாதன்ஷ் கவுன்சிலின் தலைவருமான ஹஸ்ரத் சையத் நசீருதீன் அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமர் மோடிக்கு எதிராக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பயன்படுத்திய விஷம வார்த்தைகளை வன்மையாக கண்டிக்கிறேன்.

india,pakistan, ,இந்தியா, பாகிஸ்தான், பிலாவல் பூட்டோ

பிலாவல் பூட்டோவுக்கு எனது அறிவுரை என்னவென்றால், இந்தியாவை பாகிஸ்தானுடன் ஒப்பிட வேண்டாம். நமது அரசியலமைப்புச் சட்டம் அனைத்து மதத்தினருக்கும் சுதந்திரம் அளிக்கிறது. ஒவ்வொரு முஸ்லிமும் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம்.

பாகிஸ்தான் முஸ்லீம்களை விட இந்திய முஸ்லீம்கள் மிகவும் பாதுகாப்பானவர்கள் மற்றும் சிறந்தவர்கள் என்பதை பாகிஸ்தான் நினைவில் கொள்ள வேண்டும். பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார் என்ற செய்தியை பிலாவல் பூட்டோ மறந்துவிட்டார். அவர் இவ்வாறு கூறினார்

Tags :
|