Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திரவுபதி முர்முவிடம் தேர்தல் ஆணையம் இன்று வழங்குகிறது

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திரவுபதி முர்முவிடம் தேர்தல் ஆணையம் இன்று வழங்குகிறது

By: vaithegi Fri, 22 July 2022 09:25:21 AM

ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திரவுபதி முர்முவிடம் தேர்தல் ஆணையம் இன்று வழங்குகிறது

புதுடெல்லி: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய குடியரசின் தலைவராக ஜனாதிபதி வழங்குகிறர். நாட்டின் முதல் குடிமகன் மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி இவரே ஆவார். இதற்கு இடையே, நாட்டின் ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பணியாற்றி வரும் நிலையில் அவரின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான பணியை இந்திஅய் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி, ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெற்றது. இதில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளராக திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்கா போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் நாடு முழுவதிலும் உள்ள எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். மேலும் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதன் மூலம் 64 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகள் பெற்ற திரவுபதி முர்மு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றார்.

chief election commission of india,draupathi murmu,,certificate ,இந்திய தலைமை தேர்தல் ஆணையம், திரவுபதி முர்மு, ,சான்றிதழ்

மேலும் இந்த வெற்றியின் மூலம் நாட்டின் 15-வது ஜனாதிபதியாகவும், முதல் பழங்குடியின பெண் ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார். அதேபோல், பிரதிபா பாட்டீலுக்கு அடுத்ததாக நாட்டின் 2-வது பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் முர்மு பெற்றுள்ளார்.

இதற்கிடையில், ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை பொதுச்செயலாளர் பிரமோத் சந்திர மொடி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றிபெற்ற நிலையில் தேர்தல் முடிவுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி பிரமோத் சந்திர மொடி இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று சமர்ப்பிக்க உள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை தேர்தல் நடத்தும் அதிகாரி சமர்ப்பித்த பின் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை திரவுபதி முர்முவிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று வழங்குகிறது. இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் அந்த சான்றிதழில் கையெழுத்திடுகின்றனர். அதன் பின், அந்த சான்றிதழ் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற திரவுபதி முர்முவிடம் வழங்கப்படுகிறது. அந்த சான்றிதழ் மத்திய உள்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Tags :
|