ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை முதலமைச்சர் இன்று மீண்டும் சட்டப்பேரவையில் தாக்கல்
By: vaithegi Thu, 23 Mar 2023 12:07:05 PM
சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்று மீண்டும் தாக்கல் ... ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளுக்கு அடிமையாகி, பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே இதை தடுக்க திமுக அரசு ஆன்லைன் ரம்மி அவசர தடை சட்டத்தை கொண்டு வர, ஓய்வுபெற்ற நீதிபதி சந்திரு தலைமையில் குழு ஒன்றை அமைத்து.
இதனை அடுத்து அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் தமிழ்நாடு சட்டசபையில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்தை இயற்றி, அந்த சட்ட மசோதாவை ஆளுநர் ரவி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தது. ஆனால் ஆளுநரை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.
Tags :