Advertisement

தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் கேரளா முதல்வர்

By: Nagaraj Fri, 14 Aug 2020 7:47:45 PM

தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் கேரளா முதல்வர்

தனிமைப்படுத்திக் கொண்ட முதல்வர்... கேரள விமான விபத்து மீட்புப் பணியில் ஈடுபட்ட உயர் அதிகாரிகள் உள்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், முதல்வர் பினராயி விஜயன் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நேரிட்ட விமான விபத்தில், மீட்புப் பணியில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், மாவட்ட எஸ்.பி., காவலர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

plane crash,corona,loneliness,chief,officers ,விமான விபத்து, கொரோனா, தனிமை, முதல்வர், அதிகாரிகள்

இதற்கிடையில் விபத்து நடந்த இடத்தை கேரள முதல்வர் பினராயி விஜயனும் பார்வையிட்டிருந்தார். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் பலருக்கும் தொற்று உறுதியானதால் கேரள முதல்வர் பினராயி விஜயன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதேபோல் மீட்புப்பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் உட்பட 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|