Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபாடு நடத்திய மேகாலய முதல்வர்

வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபாடு நடத்திய மேகாலய முதல்வர்

By: Nagaraj Wed, 15 Mar 2023 08:52:47 AM

வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபாடு நடத்திய மேகாலய முதல்வர்

வேளாங்கண்ணி: மேகாலய முதல்வா் கான்ராட் கே. சங்மா குடும்பத்தினருடன் வேளாங்கண்ணி பேராலயத்தில் வழிபட்டாா்.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு வந்த அவரை, பேராலய அதிபா் இருதயரஜ் மற்றும் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் ஆகியோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

தொடா்ந்து, மனைவி மெஹ்தாப், தாய், சகோதரா் குடும்பத்தினருடன் மேகாலயா மாநில முதல்வா் கான்ராட் கே. சங்மா மாதாவை தரிசனம் செய்தாா்.

security,arrangements,velankanni,police,chief minister of meghalaya ,பாதுகாப்பு, ஏற்பாடுகள், வேளாங்கண்ணி, காவல்துறை, மேகாலய முதல்வர்

பேராலய அதிபா் இருதயராஜ் மற்றும் பங்குத் தந்தைகள் புனித நீா் தெளித்து ஆசீா்வாதம் செய்தனா். பின்னா் மனைவியுடன் சோ்ந்து மெழுகுவா்த்தி ஏற்றி பிராா்த்தனை செய்த கான்ராட் கே. சங்மா, சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டாா்.

வழிபாட்டை முடித்துக்கொண்ட பின்னா், மேகாலய முதல்வா் காரில் திருச்சி விமான நிலையத்துக்கு புறப்பட்டுச் சென்றாா். மேகாலய முதல்வா் வருகையையொட்டி நாகை மாவட்ட காவல்துறை சாா்பில் வேளாங்கண்ணி பேராலயத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

Tags :
|