- வீடு›
- செய்திகள்›
- தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.500.34 கோடி மதிப்பிலான குடியிருப்புகளை…… தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறப்பு
தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.500.34 கோடி மதிப்பிலான குடியிருப்புகளை…… தமிழக முதல்வர் காணொலி வாயிலாக திறப்பு
By: vaithegi Fri, 10 June 2022 5:56:00 PM
சென்னை : குடியிருப்பு இல்லாத மக்களுக்கு தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.500.34 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இத்திட்டத்தின் படி, ரூ. 270.15 கோடி மதிப்பீட்டில் 9 திட்டப் பகுதிகளில் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன என தெரியவந்துள்ளது.
இதனை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் 2,707 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ. 270.15 கோடி மதிப்பீட்டில் 9 திட்டப் பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
4,880 பயனாளிகளுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகள் மற்றும் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.500.34 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இதன்மூலம், பயனாளிகளுக்கு குடியிருப்புகள் கிடைக்கும்.