Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பள்ளி செல்லும் மாணவர்களை வாழ்த்தி முதலமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

பள்ளி செல்லும் மாணவர்களை வாழ்த்தி முதலமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

By: vaithegi Mon, 13 June 2022 10:05:49 PM

பள்ளி செல்லும் மாணவர்களை வாழ்த்தி முதலமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்

தமிழகம்: கோடை விடுமுறைக்கு பின், மழலையர் வகுப்பு குழந்தைகளுக்கும் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.), 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 2022-23-ம் கல்வியாண்டுக்கான நேரடி வகுப்புகள் அவர்களுக்கு ஆரம்பாகிறது. இதனையடுத்து, வகுப்புக்கு வருகிற பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் வரவேற்று இனிப்புகளை வழங்கினர். இந்நிலையில் பள்ளி செல்லும் மாணவர்களை வாழ்த்தி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. துள்ளி வரும் பிள்ளைச் செல்வங்கள் அனைவரையும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

live classes,chief minister mk stalin,twitter ,நேரடி வகுப்புகள் ,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டுவிட்டர்

கொரோனா என்ற பெருந்தொற்றால் பள்ளிக்கு நேரில் வந்து பயிலும் முறை தடைபட்டது. இருந்தாலும் ஆன்லைன் மூலமாகக் கல்வி கற்றீர்கள். பள்ளிச்சூழலே கற்கும் திறனையும், அறிவாற்றலையும் மேன்மைப்படுத்தும். இடையில் தடைபட்ட வாய்ப்பை இப்போது அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மாணவ - மாணவியர் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல் இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகளை நோக்கிப் பிள்ளைகள் வருகிறார்கள். அவர்களைக் கனிவுடன் வரவேற்று அரவணைப்புடன் பாடங்களைக் கற்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். தடைபட்ட கல்வியைத் தாராளமாக வழங்கி முழுமைப்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் உங்கள் கைகளில்தான் இருக்கிறது. கல்விச் சாலைகளில் அறிவு ஒளி வீசட்டும், மாநிலம் பயன்பெறட்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வாரத்திற்கு ஒருநாள் அனுபவப் பகிர்வு, நீதிபோதனை பாடவேளைக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாடவேளைக்கு சம்பந்தப்பட்ட வகுப்பாசிரியர் பொறுப்பேற்று மாணவர்களின் மனநலன் சார்ந்து தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags :