Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நான் முதல்வன் போட்டித்தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்க முதல்வர் வலியுறுத்தல்

நான் முதல்வன் போட்டித்தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்க முதல்வர் வலியுறுத்தல்

By: vaithegi Fri, 04 Aug 2023 4:08:39 PM

நான் முதல்வன் போட்டித்தேர்வு ஊக்கத்தொகைத் திட்டத்தை இளைஞர்கள்  பயன்படுத்திக் கொள்க முதல்வர் வலியுறுத்தல்

சென்னை: : TNSDC, அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வின் தேர்வை 10.09.2023 அன்று நடத்தத் ஊக்கதொகைக்கான மதிப்பீட்டுத் திட்டமிட்டு உள்ளது. எனவே இதன்மூலம் தேர்ந்தெடுக்கப்படும் 1000 மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் 7500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும்.

ஆனால் ஏற்கனவே அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமை பணிகள் பயிற்சி மையங்களுக்கான (ஆர்.ஏ புரம் சென்னை, பாரதியார் பல்கலைக்கழகம் கோவை மற்றும் காமராஜர் பல்கலைக்கழகம் மதுரை) நுழைவுத் தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது.

principal,i am the first competitive exam,incentives ,முதல்வர் ,நான் முதல்வன் போட்டித்தேர்வு ,ஊக்கத்தொகை


இதையடுத்து இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்பும் ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் விரிவான அறிவிக்கையைப் படித்து பார்த்து, 02.08.2023 கொடுக்கப்பட்டிருக்கும் அன்று முதல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 17.08.2023 ஆகும் என தெரிவிக்கபட்டுள்ளது என தமிழ்நாடு அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளாதாவது , "தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்திய ஆட்சிப் பணிக்கு அதிகம் தேர்வாக வேண்டும் என்று பல முன்முயற்சிகளை நமது அரசு எடுத்து வருகிறது.அதில் ஒன்றாக, #நான்_முதல்வன் போட்டித்தேர்வுகள் பிரிவு வாயிலாக அறிவிக்கப்பட்டு உள்ள இந்த ஊக்கத்தொகைத் திட்டத்தை #UPSC தேர்வுக்குத் தயாராகும் நம் இளைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இளைய தமிழகம் உலகை வெல்லட்டும்! " என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :