Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வருகிற ஜூன் 5ஆம் தேதி முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்

வருகிற ஜூன் 5ஆம் தேதி முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்

By: vaithegi Wed, 31 May 2023 12:32:09 PM

வருகிற ஜூன் 5ஆம் தேதி முதலமைச்சர் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்

சென்னை : வரும் ஜூன் 5ல் மு க ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு ..காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணை வருகிற ஜூன் 12-ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நெல் பாசனத்திற்காகவும், விவசாயிகளின் நலனை காக்கவும் மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் அணைகளின் நீர் இருப்பை பொறுத்து 12ஆம் தேதிக்கு முன்பாகவே கூட இயக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

delta districts,chief minister , டெல்டா மாவட்டங்கள்,முதலமைச்சர்

மேட்டூர் அணையில் நீர் திறக்கப்படுவதன் மூலம் சேலம் ,நாமக்கல், ஈரோடு ,கரூர்,திருச்சி, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் நிலையில் அதற்கு முன்னதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

Tags :