Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மழையால் பாதித்த மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் நாளை முதல்வர் பார்வை

மழையால் பாதித்த மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் நாளை முதல்வர் பார்வை

By: Nagaraj Sun, 13 Nov 2022 2:55:51 PM

மழையால் பாதித்த மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் நாளை முதல்வர் பார்வை

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நாளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

வடசென்னை பகுதியில் மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர் சந்தித்தார். பின்னர் அவர் கூறுகையில் மழையை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அரசின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கட்டும், மக்கள் பாராட்ட வேண்டும். எவ்வளவு மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள அரசும், சென்னை மாநகராட்சியும் தயாராக உள்ளன என்றார்.

conference,inspecting,m.k.stals,north chennai area ,ஆய்வு செய்த, பகுதியில், மழைநீர் வடிகால், முதல்வர், வடசென்னை

சென்னை ஓட்டேரி, திருவிக் நகர், கொளத்தூர் ஆகிய இடங்களில் மழை சேதங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். ஓட்டேரியில் தேங்கும் மழைநீரை ராட்சத மின் மோட்டார்கள் மூலம் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு முதல்வரிடம் அறிவுறுத்தப்பட்டது.

நெடுஞ்சாலைத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்தை செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். சென்னை ஓட்டேரியில் உள்ள மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கொசுவலை வழங்கினார். கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, சீர்காழி கடலூரில் நாளை ஆய்வு செய்து, அதற்காக இன்று இரவு புறப்பட்டு செல்கிறார். மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவார். சீர்காழியில் 44 செ.மீ மழை பெய்து வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்கிறார்.

Tags :