Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூட்டிய காருக்குள் சிக்கிய குழந்தை... பரிதாபமாக இறந்த சம்பவம்

பூட்டிய காருக்குள் சிக்கிய குழந்தை... பரிதாபமாக இறந்த சம்பவம்

By: Nagaraj Thu, 30 June 2022 11:57:36 PM

பூட்டிய காருக்குள் சிக்கிய குழந்தை... பரிதாபமாக இறந்த சம்பவம்

கனடா: கனடாவின் ஒன்ராறியோவில், தன் 23 மாதக் குழந்தையை காருக்குள் வைத்துப் பூட்டிவிட்டு பள்ளியில் பாடம் எடுக்கச் சென்றுவிட்டார் அதன் தாய். ஆனால் அந்த குழந்தை மூச்சுத்திணறி இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bancroft பகுதியில் வாழ்ந்து வந்த Everett Smith என்ற அந்தக் குழந்தையின் தாய், North Hastings High School என்ற பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். கடந்த வியாழக்கிழமை, தன் குழந்தையுடன் காரில் பள்ளிக்கு வந்த அந்த ஆசிரியை, காரை பார்க்கிங்கில் விட்டுவிட்டு பணிக்குச் சென்றுவிட்டிருக்கிறார்.

மாலை 3.45 மணியளவில், காருக்குள் Smith பேச்சு மூச்சில்லாமல் கிடப்பது கண்டுபிடிக்கப்பட, உடனடியாக அவன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளான். ஆனால், சிறிது நேரத்தில் அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

tragedy,car,child,shock,accident,mayor ,துயர சம்பவம், கார், குழந்தை, அதிர்ச்சி, அசம்பாவிதம், மேயர்

குழந்தை Smith பகல் நேரக் காப்பகம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்று கூறும் அப்பகுதி மேயரான Paul Jenkins, ஆனால், அவன் தற்செயலாக காருக்குள்ளேயே விடப்பட்டிருக்கிறான் என்கிறார்.

எதனால் இந்த அசம்பாவிதம் நடந்தது என்பது தெரியாத நிலையில், இந்த சம்பவம் Bancroft பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொலிசார் அந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags :
|
|
|