Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • லடாக் எல்லையில் ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி நிலைமையை மாற்ற முயற்சி

லடாக் எல்லையில் ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி நிலைமையை மாற்ற முயற்சி

By: Karunakaran Mon, 31 Aug 2020 1:45:35 PM

லடாக் எல்லையில் ஒப்பந்தத்தை மீறி சீன ராணுவம் மீண்டும் அத்துமீறி நிலைமையை மாற்ற முயற்சி

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் மாதம் இந்திய-சீன வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீனா தரப்பிலும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு பின் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.

எல்லையில் பதற்றத்தை குறைக்க இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தின. அதன்பின், எல்லையில் இருந்து இருநாட்டு படைகளும் விலகி கொண்டன. அதன்பின்னர் எல்லையில் அமைதி திரும்பத் தொடங்கியது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தற்போது, ஒப்பந்தத்தை மீறி லடாக்கில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

chinese military,ladakh border,situation,encroachment ,சீன இராணுவம், லடாக் எல்லை, நிலைமை, அத்துமீறல்

இதுகுறித்து இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் அமான் ஆனந்த் கூறுகையில், 29ம் தேதி நள்ளிரவில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது. எல்லையில் நிலைமையை மாற்ற ஆத்திரமூட்டும் செயல்களை மேற்கொண்டதாக கூறினார்.

மேலும் அவர், இந்திய வீரர்கள் பாங்காங் சோ ஏரியின் தெற்கு கரையில் சீன ராணுவத்தின் செயல்பாட்டை முன்கூட்டியே நிறுத்தி, நமது நிலைகளை வலுப்படுத்தவும், சீன படைகளின் நோக்கங்களை முறியடிக்கவும் நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். தற்போது இது தொடர்பாக ராணுவ தளபதிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Tags :