Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வரும் 2ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

வரும் 2ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

By: Nagaraj Sun, 18 Dec 2022 00:04:28 AM

வரும் 2ம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

திருச்சி: வரும் 2ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நாளான சொர்க்கவாசல் திறப்பு விழாவையொட்டி திருச்சி மாவட்டத்துக்கு வரும் 2ஆம் தேதி (திங்கட்கிழமை) உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. .

local holiday,temple,trichy, ,உள்ளூர் விடுமுறை, கோவில், திருச்சி

இந்த விடுமுறை திருச்சி மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தும்.

இந்த விடுமுறையில் அனைத்து அரசு துணை கருவூலங்கள் மற்றும் மாவட்ட கருவூலங்கள் குறைந்த பணியாளர்களுடன் பாதுகாப்பாக செயல்படும். அதுபோல் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 7ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|