Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வருகிற மார்ச் 4-ம் தேதி வேலை நாள்

இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வருகிற மார்ச் 4-ம் தேதி வேலை நாள்

By: vaithegi Fri, 24 Feb 2023 2:41:50 PM

இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு வருகிற மார்ச் 4-ம் தேதி வேலை நாள்

சென்னை: திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் வருகிற மார்ச் 4-ம் தேதி இயங்கும் .... தமிழகத்தில் மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கல்வி இணை செயல்பாடுகளான நாட்டு நலப்பணி திட்டம், விளையாட்டு மற்றும் உடற்கல்வி திட்டம், சாரணர் இயக்கம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இதன் மூலமாக மாணவர்கள் தங்களின் தனித்திறமைகளை வளர்த்து கொள்ள முடியும். இந்த நிலையில் கல்வி இணை செயல்பாடுகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

dindigul,madurai,sivagangai,theni,ramanathapuram,schools ,திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம்,பள்ளிகள்

இதையடுத்து இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தேனி, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இருக்கும் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களை வருகிற மார்ச் 4-ம் தேதி அன்று துறை சார் உயர் அதிகாரிகளால் மண்டல குழு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

எனவே இந்த வேலை நாளுக்கு பதிலாக வருகிற மார்ச் 13ம் தேதி அன்று விடுமுறை தினமாக மாற்றப்படும் எனவும் அறிவித்துளளார். ஆனால் அன்றைய தினம் 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு வழக்கம் போன்று பள்ளிகள் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

Tags :
|