Advertisement

வரும் 8-ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

By: vaithegi Thu, 01 Sept 2022 8:25:04 PM

வரும் 8-ம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

கோவை: ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை கேரளாவில் மிகவும் பிரபலமானது. மேலும் இந்த பண்டிகை கேரள மாநிலத்தில் பாரம்பரியச் சிறப்புடனும், பெரும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படும்.

இதனை அடுத்து கோவை மாவட்டத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் கணிசமாக வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு 08.09.2022 (வியாழக்கிழமை) அன்று கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்களில் உள்ளூர் விடுமுறை நாளாக மாவட்ட கலெக்டர் சமீரன் அவர்கள் அறிவித்துள்ளார்.

local holiday,coimbatore ,உள்ளூர் விடுமுறை ,கோவை

இதை தொடர்ந்து இந்த விடுமுறையை ஈடுசெய்யம் விதமாக செப்டம்பர் 17-ம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.

மேலும் உள்ளூர் விடுமுறை நாள் அன்று மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

Tags :