Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • போலீசாரிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார் காவல் ஆணையர்

போலீசாரிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார் காவல் ஆணையர்

By: Nagaraj Fri, 23 Dec 2022 11:43:43 AM

போலீசாரிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார் காவல் ஆணையர்

சென்னை: சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் போலீஸாரிடம் குறைகளை கேட்டு, மனுக்களை பெற்றுக் கொண்டார்.

உங்கள் துறையில் முதல்வர் திட்டத்தின்கீழ், சென்னை காவல்துறையில் காவலர்கள் குறைதீர் முகாம் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் இதுவரை 2 கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக, 3வது கட்ட போலீஸ் குறைதீர்க்கும் முகாம், எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் நடந்தது. சென்னை பெருநகர காவல்துறையில் பணிபுரியும் காவலர்களிடம் பெறப்பட்ட 257 மனுக்களை கமிஷனர் பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

assistance,constables filed petitions,punishment,salary discrepancy, ,காவலர், காவல் ஆணையர், குறைதீர் முகாம், முதல்வர் திட்டம்

பணியிட மாற்றம், தண்டனை, ஊதிய முரண்பாடு, காவலர் தங்குமிட கோரிக்கை, காவலர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து மருத்துவ உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக காவலர்கள் மனுக்கள் அளித்தனர்.

இன்றும் 2வது நாளாக போலீஸ் கமிஷனர் மனுக்களை பெற உள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சியில், கூடுதல் போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில், இணை கமிஷனர் சாமுண்டீஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags :