Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை

By: Nagaraj Tue, 12 Sept 2023 2:49:05 PM

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாததை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகை

நாகப்பட்டினம்: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் நாகையில் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தடையை மீறி பேரணியாக வந்த 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து நாடுமுழுவதும் இடதுசாரி அமைப்புகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அதன்படி நாகை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

police,arrest,without permission,protest,indian communist ,போலீசார், கைது, அனுமதியின்றி, போராட்டம், இந்திய கம்யூனிஸ்ட்

நாகை சிஎஸ்ஐ பள்ளி திடலில் இருந்து பேரணியாக வந்த 300 க்கும் மேற்பட்ட இந்திய கம்யுனிஸ்ட் கட்சியினர் விலை வாசி உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜக அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து நாகை தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள், இந்தியாவில் அதிகரிக்கும் வேலை தட்டுப்பாட்டை கண்டித்தும், இந்தி திணிப்புக்கு எதிராகவும், சொந்த லாபங்களுக்கு நாட்டை தனியார்மயமாக்கும் செயலுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் காவல்துறை அனுமதியில்லாமல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் 300 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Tags :
|
|