Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பாதித்த முதியவர் இறுதிச்சடங்கில் எம்எல்ஏ உட்பட 400 பேர் பங்கேற்றதால் பரபரப்பு

கொரோனா பாதித்த முதியவர் இறுதிச்சடங்கில் எம்எல்ஏ உட்பட 400 பேர் பங்கேற்றதால் பரபரப்பு

By: Nagaraj Tue, 14 July 2020 8:46:28 PM

கொரோனா பாதித்த முதியவர் இறுதிச்சடங்கில் எம்எல்ஏ உட்பட 400 பேர் பங்கேற்றதால் பரபரப்பு

இறந்த முதியவருக்கு கொரோனா...தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவரது சடலத்தை உறவினர்கள் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் இருந்து வாங்கிச் சென்று இறுதிச் சடங்கு செய்துள்ளனர்.

இதில் சுமார் 400 பேர் பங்கேற்றுள்ளனர். மேலும், தூத்துக்குடி எம்எல்ஏவும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி டூவிபுரம் 2-வது தெருவை சேர்ந்த 81 வயது முதியவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உறவினர்கள் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை கொரோனா முன்சிகிச்சை வார்டில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துள்ளனர். மேலும், அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.

elder,corona,funeral,sure,400 people ,முதியவர், கொரோனா, இறுதிச்சடங்கு, உறுதியானது, 400 பேர்

இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் அவர் திடீரென இறந்தார். இதையடுத்து உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு அவரது உடலை உடனே ஒப்படைக்கக் கோரி தகராறு செய்துள்ளனர். கொரோனா பரிசோதனை முடிவு வந்த பிறகே உடலை ஒப்படைக்க முடியும் என மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து தகராறு செய்யவே சடலத்தை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த முதியவர் உடலுக்கு இன்று காலையில் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் பெ.கீதாஜீவன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிலையில் முதியவருக்கு கொரோனர தொற்று இருந்தது இன்று காலை பரிசோதனை முடிவு தெரிய வந்தது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடலை பாதுகாப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

elder,corona,funeral,sure,400 people ,முதியவர், கொரோனா, இறுதிச்சடங்கு, உறுதியானது, 400 பேர்

ஆனால் அதற்குள் உடலை இறுதி சடங்கு செய்வதற்காக உறவினர்கள் ஊர்வலமாக தூத்துக்குடி சிதம்பரநகர் மையவாடிக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். இறுதி சடங்கில் சுமார் 400 பேர் பங்கேற்றுள்ளனர். அங்கு சென்ற மாநகராட்சி அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் அவருக்கு கொரோனா தொற்று என்ற விவரத்தை அறிவித்தனர். இதனால் பாதி பேர் அங்கிருந்து சென்றுவிட்டனர். உறவினர்கள் அவரது உடலை எரியூட்டி விட்டுச் சென்றனர்.

இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்களுக்கு ஏதேனும் கொரோனா அறிகுறி ஏற்பட்டால் உடனே அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரவேண்டும் என ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக எம்எல்ஏவிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முதியவர் வீடு இருந்த பகுதி நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|
|
|