Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா சமூகப்பரவலாக மாறவில்லை; சுகாதார அமைச்சு மீண்டும் தகவல்

கொரோனா சமூகப்பரவலாக மாறவில்லை; சுகாதார அமைச்சு மீண்டும் தகவல்

By: Nagaraj Thu, 15 Oct 2020 8:26:37 PM

கொரோனா சமூகப்பரவலாக மாறவில்லை; சுகாதார அமைச்சு மீண்டும் தகவல்

சமூக பரவலாக மாறவில்லை... இலங்கையில் கொரோனா வைரஸானது இன்னும் சமூகப் பரவலாக மாறவில்லை என சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

மினுவங்கொடை கொவிட்-19 கொத்தணிப் பரவலைத் தொடர்ந்து, கொரோனா பரவலானது சமூகப் பரவலாக மாறயுள்ளதாக கூறப்படுவது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை என்றும் அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஜெயரூவன் பண்டார தெரிவித்துள்ளார்.

re-emphasis,social outreach,emergency treatment,corona ,மீண்டும் வலியுறுத்தல், சமூக பரவல், அவசர சிகிச்சை, கொரோனா

எனவே எந்தவொரு ஆபத்தும் இல்லாமல் கொத்தணி பரவலை முடிவுக்கு கொண்டுவருவதில் சுகாதார அதிகாரிகள் நம்பிக்கை கொண்டுள்ளனர என்றும் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்களும் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

அதேநேரம் மினுவாங்கொடை கொத்தணிப் பரவலில் சிக்கிய கொரோனா தோற்றாளர்கள் எவரும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags :