Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மார்டனா நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என தகவல்

மார்டனா நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என தகவல்

By: Karunakaran Wed, 30 Sept 2020 7:54:25 PM

மார்டனா நிறுவனம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என தகவல்

கொரோனா வைரசை தடுக்க ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு அவை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் முயற்சியில் பல நிறுவனங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவை சேர்ந்த மார்டனா இங்ஸ். நிறுவனமும் ஒன்று.

மார்டனா இங்ஸ். நிறுவனம் உருவாக்கியுள்ள மார்டனா தடுப்பூசி நல்ல பலன் தருவது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் பரிசோதனை தற்போது மூன்றாவது கட்டத்தில் உள்ளது. தற்போது, மூன்றாம் கட்ட பரிசோதனைகள் ஒருபக்கம் நடந்துவந்த போதும் முதியவர்களைக்கு தனியாக இந்த கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பரிசோதனை நடைபெற்றது.

corona vaccine,martana,report,safe ,கொரோனா தடுப்பூசி, மார்டானா, அறிக்கை,பாதுகாப்பு

தனது மார்டனா தடுப்பூசியை வயது முதியவர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் அந்நிறுவனம் ஈடுபட்டு வந்தது. அதில் 56 முதல் 70 வயதிற்கு மேற்பட்ட 40 முதியவர்களுக்கு மார்டனா கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட இளைஞக்கு எவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுகிறதோ அதே அளவில் முதியவர்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாவது தெரியவந்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட இளைஞர்களுக்கு உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி அளவு போன்றே முதியவர்களுக்கும் எதிர்ப்பு சக்தி உருவாவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மார்டனா கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்பதும் உறுதியாகியுள்ளது. இதனால், கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், தடுப்பூசி பரிசோதனை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|