பொறியியல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது
By: vaithegi Mon, 24 July 2023 10:37:36 AM
சென்னை : சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம் ... சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவானது , கடந்த மே மாதம் 5ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை நடைபெற்றது.
இதனை அடுத்து இதில் சுமார் 1 லட்சத்து 87 ஆயிரத்து 847 பேர் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்ப கட்டணத்துடன், சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்தனர். இவர்களிலிருந்து 1 லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் கலந்தாய்வு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் 26 ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்வு கடந்த 22 ஆம் தேதி முதல் தொடங்கியது.
இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்கிய நிலையில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 90 பேர் தங்களிடங்களை தேர்வு செய்து உள்ளனர்.