Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதானிக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பதை நாடு அறிய வேண்டும்

அதானிக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பதை நாடு அறிய வேண்டும்

By: Nagaraj Tue, 07 Feb 2023 9:23:44 PM

அதானிக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பதை நாடு அறிய வேண்டும்

புதுடெல்லி: பல கோடி ரூபாய் ஊழல் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அதானிக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பதை நாடு அறிய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தி தெரிவித்தார்.

அதானி குழுமம் மீதான பங்குச் சந்தை மோசடி புகார் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அமளியால் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

central,congress,government,reporters, ,அதானி குழுமம், எதிர்க்கட்சி, புதுடெல்லி, ராகுல் காந்தி

மத்திய அரசு குறித்தும், தொழிலதிபர்களுடன் நெருக்கம் குறித்தும் பல ஆண்டுகளாக பேசி வருகிறேன். அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். ஆனால் மத்திய அரசு விவாதம் நடத்த வேண்டும்.

அதற்கு பயம். அந்த விவாதத்தைத் தவிர்க்க பிரதமர் மோடி தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வார். அதற்குக் காரணம் உண்டு. எனக்கு அது தெரியும்.

ஆனால் உண்மை வெளிவர வேண்டும். பல கோடி ரூபாய் ஊழல் அம்பலப்படுத்தப்பட வேண்டும். அதானிக்கு பின்னால் உள்ள சக்தி யார் என்பதை நாடு அறிய வேண்டும் என்றார்.

Tags :