திலினி பிரியமாலியிடம் வாக்குமூலம் பெற அனுமதி வழங்கியது கோர்ட்
By: Nagaraj Sat, 26 Nov 2022 9:55:46 PM
கொழும்பு: குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி... விளக்கமறியலில் உள்ள திலினி பிரியமாலியிடம் வாக்குமூலம் பெறலாம் என்று நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
நிதி மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 30ஆம் திகதி வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
குற்றப்புலனாய்வு அதிகாரிகள் சிறைச்சாலைக்குள் சென்று வாக்குமூலம் பதிவு
செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன
ஏக்கநாயக்க உறுதிபடுத்தியுள்ளார்.
Tags :
sanction |