Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராகுல்காந்திக்கு வரும் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு செய்தது கோர்ட்

ராகுல்காந்திக்கு வரும் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு செய்தது கோர்ட்

By: Nagaraj Tue, 04 Apr 2023 5:39:36 PM

ராகுல்காந்திக்கு வரும் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு செய்தது கோர்ட்

புதுடில்லி: ராகுல்காந்திக்கு வரும் 13ம் தேதி வரை ஜாமீன் நீட்டிப்பு செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மோடி பெயரில் உள்ளவர்கள் எல்லாம் திருடர்களாக இருக்கிறார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பேச்சு சர்ச்சையான நிலையில், இது குறித்து பாஜக அவதூறு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.

bail,extension,order,petition,appeal,rahul gandhi ,ஜாமீன், நீட்டிப்பு, உத்தரவு, மனு தாக்கல், மேல் முறையீடு, ராகுல்காந்தி

இதனை அடுத்து ராகுல் காந்தி தரப்பிலிருந்து ஜாமீன் பெற்றதாகவும் மேல்முறையீடு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது. நாட்டில் பேசுபொருளாகியுள்ள இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், ராகுல்காந்திக்கு வரும் 13 ஆம் தேதி வரை ஜாமீன் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Tags :
|
|
|