பாஜ நிர்வாகி முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
By: Nagaraj Wed, 19 Oct 2022 8:40:56 PM
மதுரை: முதல்வரை அவதூறாக பேசிய வழக்கில், முன்ஜாமீன் கோரி, பா.ஜ., நிர்வாகி தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசுவ ஹிந்து பாரிஸ் அமைப்பு சார்பில் ஜூன் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா அம்பாசமுத்திரம் நகரச் செயலர் ராமச்சந்திரன் (எ) ராஜேந்திரன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவதூறாகப் பேசியதாகவும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதன் அடிப்படையில் அம்பாசமுத்திரம் போலீசார் ராமசந்த் மீது அவதூறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி ராமச்சந்திரன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இம்மானு நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் முன் விசாரணைக்கு வந்தது. கூடுதல் அரசு வக்கீல் முத்துமாணிக்கம் ஆஜராகி, மனுதாரர் அவதூறாக பேசியதாக கூறினார்.
எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்