Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது

By: vaithegi Fri, 07 July 2023 10:06:07 AM

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்கவுள்ளது

சென்னை: மீதான அவதூறு வழக்கில் நாளை தீர்ப்பு .... கடந்த 2019 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கில் மார்ச் 23-ம் தேதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஹெச்.ஹெச். வர்மா, ராகுல் குற்றவாளி என அறிவித்ததோடு அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தார்.

மேலும் அத்துடன் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பதாகக் கூறி, ஜாமீனும் வழங்கி இருந்தார். 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக ராகுல் காந்தியின் எம்.பி.பதவியும் பறிக்கப்பட்டது.

court,rahul gandhi ,நீதிமன்றம் ,ராகுல் காந்தி

அதன் பின்னர், சூரத் மாவட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜராகி ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 2 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த சூரத் மாவட்ட செஹன்ஸ் நீதிமன்றம் , ராகுல்காந்தியின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு அளிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிராக குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் இவ்வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், ராகுல்காந்திக்கு சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிரான வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது.

Tags :
|