- வீடு›
- செய்திகள்›
- பெங்களூருவில் கொரோனா அதிகமாகி வருவதால் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கயிருப்பதாக தகவல்
பெங்களூருவில் கொரோனா அதிகமாகி வருவதால் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கயிருப்பதாக தகவல்
By: Karunakaran Fri, 17 July 2020 1:11:36 PM
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அசுரவேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக பெங்களூருவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பெங்களூருவில் சராசரியாக தினமும் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது.
இந்நிலையில் பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் மாவட்டங்களில் ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இருப்பினும் பெங்களூருவில் கொரோனா பாதிப்பு மட்டும் குறைந்தபாடி இல்லை. வீடு, வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 198 வார்டுகளிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றில் 196 வார்டுகளில் தலா 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், பெங்களூருவில் ஒரு வார ஊரடங்கு அமல்படுத்துவதால் கொரோனா கட்டுக்குள் வந்து விடாது. குறைந்த பட்சம் 15 நாட்களாக ஊரடங்கு அமலில் இருக்க வேண்டும் என அரசுக்கு நிபுணர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இதனால், பெங்களூருவில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பது குறித்து மந்திரிகள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-மந்திரி எடியூரப்பா ஆலோசிக்கயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.