நாளை மறுநாள் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
By: vaithegi Wed, 25 Jan 2023 09:41:14 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா ஜனவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பக்தர்களின் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் செய்து கொண்டு வருகிறது.
ஒவ்வொரு இந்து கோவிலிலும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய கும்பாபிஷேகம் ஆனது பழனியில் வரும் ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நிகழ்வை காண கோயிலில் இருந்து, பேருந்து நிலையம் வரை எல்இடி திரை அமைக்கும் சிறப்பு ஏற்பாடுகளை தற்போது அரசு செய்து கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பழனி முருகன் கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி ஜனவரி 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.
இந்த விடுமுறையை ஈடுகட்ட பிப்ரவரி 25ம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.