Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேட் நுழைவுதேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டிப்பு

கேட் நுழைவுதேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டிப்பு

By: vaithegi Sun, 01 Oct 2023 10:31:29 AM

கேட் நுழைவுதேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டிப்பு


சென்னை: 2024-ம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தேர்வு பிப்.3 முதல் 11-ம் தேதி வரை நடைபெறவள்ளது. இதைனை அடுத்து இந்த முறை கேட் தேர்வை பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) நடத்துகிறது.

எனவே இதற்கான இணைய விண்ணப்பப் பதிவு கடந்த ஆக.30-ல் தொடங்கி செப்.29-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. இதுவரை சுமார் 1.38 லட்சம் பேர் விண்ணப்பங்களை பதிவு செய்து உள்ளனர்.

time limit,gate entrance exam ,கால அவகாசம் ,கேட் நுழைவுதேர்வு

இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்கும் கால அவகாசம் வருகிற அக்.5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://gate2024.iisc.ac.in/ எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தாமதக் கட்டணத்துடன் வருகிற அக்.13 வரை விண்ணப்பிக்கலாம். நவ.7 முதல் 11-ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். ஹால் டிக்கெட் ஜன.3-ல் வெளியிடப்படும். தேர்வு முடிவு மார்ச் 16-ல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :