கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 6.30 லட்சத்தை தாண்டியது
By: Nagaraj Thu, 23 July 2020 10:48:12 AM
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6.30 லட்சத்தை தாண்டியது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 630,138 பேர் கொரோனா வைரசால்
உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 15,371,836 பேர்
பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 9,348,761 பேர் குணமடைந்துள்ளனர். மேலும்
66,170 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 1,239,684 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால்
உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 29,890 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில்
784,266 பேர் குணமடைந்தனர். அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின்
எண்ணிக்கை 146,183 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின்
எண்ணிக்கை 4,100,875 ஆக அதிகரித்துள்ளது.
பிரேசில் நாட்டில்
கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்துள்ளது.
பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,231,871 ஆக
அதிகரித்துள்ளது. ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 12,745
ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 789,190
ஆக அதிகரித்துள்ளது.
பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின்
எண்ணிக்கை 45,501 ஆக அதிகரித்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 296,377 ஆக உயர்ந்துள்ளது.