Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சிக்கிமில் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்

சிக்கிமில் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்

By: vaithegi Fri, 06 Oct 2023 2:35:26 PM

சிக்கிமில் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்

சிக்கிம் : வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரியின் மீது திடீரென ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, கடந்த புதன் கிழமை (04.10.2023) தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கிய 23 இந்திய இராணுவ வீரர்கள் காணவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியானது.

இதனையடுத்து, அந்த 23 இந்திய இராணுவ வீரர்களில் ஒருவர் கண்டறியப்பட்டதாகவும், இப்பொது, 22 வீரர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். அடுத்து நேற்றய தினம் 14 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், இன்று பலி எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

deceased,sikkim ,உயிரிழந்தோர் ,சிக்கிம்

தற்போது, காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகிறது. மேலும், இந்த வெள்ளப்பெருக்கினால் அதிக உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது.

இதன் இடையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

Tags :