Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான மோதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 500-ஐ கடந்தது

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான மோதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 500-ஐ கடந்தது

By: Karunakaran Wed, 14 Oct 2020 2:35:33 PM

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான மோதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 500-ஐ கடந்தது

அர்மீனியா, அசர்பைஜான் நாடுகளுக்கு இடையேயான எல்லையாக பிரிக்கும் பகுதியில் அமைந்துள்ள நகோர்னோ-கராபத் என்ற மாகாணம் அசர்பைஜானின் பகுதி என சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த மாகாணத்தில் பெரும்பான்மையானோர் அர்மீனிய ஆதரவாளர்கள் ஆகும். 1994-ம் ஆண்டு இரு நாடுகளும் இடையே நடந்த போரில் இந்த மாகாணத்தின் பெரும் பகுதியை அர்மீனியா கைப்பற்றியது.

அந்த மாகாணத்திற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டதையடுத்து, அந்த மாகாணத்தை அர்மீனிய ஆதரவு மக்கள் நிர்வகித்து வந்தனர். மேலும், இதற்கு அர்மீனிய அரசும் உதவிகளை செய்துவந்தது. நகோர்னோ-கராபத் மாகாணத்தை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக அர்மீனியா - அசர்பைஜான் இடையே மோதல்கள் அரங்கேறி வருகிறது. இந்நிலையில், பல ஆண்டுகளாக சற்று தணிந்திருந்த பதற்றம் கடந்த மாதம் 27 முதல் மீண்டும் தொடங்கியது.

death toll,armenia,azerbaijan,500 death ,இறப்பு எண்ணிக்கை, ஆர்மீனியா, அஜர்பைஜான், 500 இறப்பு

நகோர்னோ - கராபத் மாணத்தை முழுவதும் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அசர்பைஜான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு அர்மீனிய ஆதரவு படையினர் பதில் தாக்குதல் கொடுத்தும் வந்தனர். 15 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த மோதலில் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகள் இரு தரப்பு படையினராலும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

அமைதி ஒப்பந்தத்தை மீறி இருநாடுகளும் ஒருவரை ஒருவர் தாக்கி வருவதால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அர்மீனியா-அசர்பைஜான் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் அர்மீனிய ஆதரவு கிளர்ச்சி படையினர் ஆகும். சண்டை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர ரஷியா, அமெரிக்கா போன்ற நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.

Tags :