Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் சிலிண்டர்கள் விநியோகம் செய்வதில் காலதாமதம் விரைவில் சரி செய்யப்படும்

சென்னையில் சிலிண்டர்கள் விநியோகம் செய்வதில் காலதாமதம் விரைவில் சரி செய்யப்படும்

By: vaithegi Thu, 11 May 2023 2:59:13 PM

சென்னையில் சிலிண்டர்கள் விநியோகம் செய்வதில் காலதாமதம் விரைவில் சரி செய்யப்படும்

சென்னை : இந்திய ஆயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியீடு .. தமிழகத்தில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சில நாட்களாகவே முன்பதிவு செய்யப்பட்ட சமையல் சிலிண்டர்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு பல எழுந்துள்ளது.

இதையடுத்து இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம், பொது மக்களின் பெரும் சிரமத்தை குறைப்பதற்காக வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு சிலிண்டர்கள் வரவழைக்கிறது. இதனால் கூடிய விரைவில் இந்நிலைமை சரியாக்கப்படும் என அறிவித்திருக்கிறது.

முன்பதிவு செய்யப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர்கள் செங்கல்பட்டு, சேலம், திருச்சி, மயிலாடுதுறை, மன்னார்குடி மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து தினசரி 124 லோடு கூடுதல் சிலிண்டர்கள் சென்னைக்கு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

cylinders,distribution,chennai ,சிலிண்டர்கள் ,விநியோகம் ,சென்னை

மேலும், இது மட்டுமல்லாமல் புதுச்சேரி, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் இருந்தும் தினமும் 100 லோடு கூடுதல் சிலிண்டர்கள் சென்னைக்கு வரவழைக்கப்படுகிறது.

இதனால் தினசரி சென்னையில் பொது மக்களுக்கு 1.2 லட்சம் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இந்த காலதாமதம் சரி செய்யப்படும் என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

Tags :