Advertisement

அரச தலைவர் ஊடகப்பிரிவின் பணிப்பாளர் பதவி விலகினார்

By: Nagaraj Sat, 09 July 2022 7:30:17 PM

அரச தலைவர் ஊடகப்பிரிவின் பணிப்பாளர் பதவி விலகினார்

கொழும்பு: பதவி விலகினார்... அரச தலைவர் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி பதவி விலகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் எதிரப்பு வலுவடைந்துள்ள நிலையில், இவர் பதவி விலகியுள்ளார். இதேவேளை, பிரதமர் பதவியிலிருந்து விலகி சர்வகட்சி ஆட்சியை பொறுப்பேற்க வழிவகை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கட்சித் தலைவர்களிடம் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் இந்த வாரம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாலும், உலக உணவுத் திட்டப் பணிப்பாளர் இந்த வாரம் நாட்டிற்கு வருகை தரவுள்ளதாலும், சர்வதேச நாணய நிதியத்திற்கான கடன் நிலைத்தன்மை அறிக்கை வரவுள்ளதாலும் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறுகிறார்.

Tags :