- வீடு›
- செய்திகள்›
- ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 38-வது நாளாக தடை
ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 38-வது நாளாக தடை
By: vaithegi Tue, 16 Aug 2022 11:11:30 AM
பென்னாகரம்: கர்நாடகா, கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து கொண்டு வருகிறது. எனவே இதனால் கர்நாடக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து உயர்ந்துள்ளது.
இதை அடுத்து நேற்று ஒகேனக்கல்லுக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 50 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.
மேலும் ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 38-வது நாளாக தடை விதித்துள்ளது.
எனவே நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து கொண்டு வருகின்றனர்.