ஜனவரி 5ம் தேதி முதல் பிரசாரத்தை தொடங்கும் திமுக தலைவர்
By: Nagaraj Fri, 20 Nov 2020 4:05:59 PM
ஜனவரி மாதத்தில் பிரசாரம் தொடக்கம்... தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஜன.,5 முதல் பிரசாரத்தை துவங்குவதாக அக்கட்சியின் முதன்மை செயலர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: 2021 சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற பெயரில் ஜன., 5 ல் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசாரத்தை துவங்குகிறார்.
15 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து 1,500 கூட்டங்கள் நடத்தி 500 உள்ளூர் நிகழ்ச்சிகளை நடத்தும் அவர், சுமார் 10 லட்சம் மக்களை சந்திக்கும் வகையில் இந்த பயணம் அமையும். இந்த 10 ஆண்டுகளில் அ.தி.மு.க., அரசு என்னென்ன செய்ய தவறியிருக்கிறது.என்ன காரியங்களை தவறாக செய்திருக்கிறார்கள்.
தி.மு.க., கட்சியில் என்னென்ன திட்டங்கள், எப்படி செயல்படுத்தப்படும்
என்பதை இந்த பயணங்களில் எடுத்து செல்வோம். பா.ஜ., அரசின் திட்டங்களுக்கு
அனுமதி தந்து மாநில உரிமைகளை விட்டு கொடுத்து சம்பாதிப்பதை மட்டுமே
நோக்கமாக கொண்ட இந்த ஆட்சியை கலைக்கும் விதத்தில் இந்த பயணம் நடக்கும்.
இந்த
பிரசாரம் 75 நாட்கள் நடக்கும். 15 தலைவர்கள் பங்கேற்பார்கள். முதலாவதாக,
திருக்குவளையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி பிரசாரத்தை
துவங்குகிறார். 29ம் தேதியில் இருந்து கனிமொழி பிரசாரத்தை துவங்குகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.