Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் குறைக்கப்பட்டுள்ளது

பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் குறைக்கப்பட்டுள்ளது

By: vaithegi Wed, 06 July 2022 6:51:39 PM

பூஸ்டர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் குறைக்கப்பட்டுள்ளது

புதுடெல்லி: நாட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மிக பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்கொள்ள உள்ளூர் தயாரிப்புகளான கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் போன்ற தடுப்பூசிகள் மிக பெரிதும் உதவி வருகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி 16ந்தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

vaccination,covishield ,தடுப்பூசி ,கோவிஷீல்டு

மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த பூஸ்டர் தடுப்பூசிக்கு கால இடைவெளி 9 மாதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான கால இடைவெளி 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அவர்கள் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் உயர்ந்து வரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான காலம் குறைக்கப்பட்டுள்ளது.

Tags :