Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சத்தீஸ்கரை பிடித்திருந்த கிரகணம்... காங்கிரஸ் குறித்து பாஜ நட்டா செய்த விமர்சனம்

சத்தீஸ்கரை பிடித்திருந்த கிரகணம்... காங்கிரஸ் குறித்து பாஜ நட்டா செய்த விமர்சனம்

By: Nagaraj Mon, 30 Oct 2023 4:40:11 PM

சத்தீஸ்கரை பிடித்திருந்த கிரகணம்... காங்கிரஸ் குறித்து பாஜ நட்டா செய்த விமர்சனம்

டோங்கர்கார்: 5 ஆண்டுகளாக சத்தீஸ்கரை கிரகணம் பிடித்திருந்தது என்று காங்கிரஸ் ஆட்சி குறித்து பாஜ தலைவர் நட்டா விமர்சனம் செய்துள்ளார்.

சத்தீஸ்கரில் சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் நடைபெற உள்ள டோங்கர்காரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, “காங்கிரஸ் கட்சி தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறது.

5-year eclipse,chhattisgarh,governance ,சத்தீஸ்கர், நட்டா ஆய்வு, 5 வருட கிரகணம், விமர்சனம்

மக்கள் நலனைப் பற்றி சிந்திக்காமல் அதன் குடும்பம் வோராவும், சியாமா சரண் சுக்லாவும் முதல்வராக இருந்தார்கள். ஆனால் 2000-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்த போது மத்திய பிரதேசம் 2 ஆக பிரிக்கப்பட்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டது.

முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் நடந்துள்ளன. நேற்று முன்தினம் சந்திரகிரகணம் ஏற்பட்டது. சத்தீஸ்கரில் 5 ஆண்டுகளாக கிரகணம் ஏற்பட்டது. மாநில அரசை அகற்ற வேண்டும்,” என்றார்.

Tags :