Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஜூன் 22 மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவிப்பு

சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஜூன் 22 மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவிப்பு

By: vaithegi Tue, 21 June 2022 11:06:23 AM

சென்னையில் பல்வேறு பகுதிகளில் ஜூன் 22  மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் தெரிவிப்பு

சென்னை: மின்சாரம் என்பது மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டது. தமிழ்நாடு அரசு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு என சில நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதுமட்டுமின்றி மாதம் ஒரு முறை மின் தடை செய்யப்பட்டு மின் வாரியம் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி நாளை சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு மின் சார்ந்த பணிகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளன.

அதன்படி, அண்ணா சாலை பகுதிகளான எல்.ஐ.சி பில்டிங் காம்ப்ளக்ஸ், சாமி ஆச்சாரி தெரு, அண்ணா சாலை எச்.பி.ஓ அலுவலகம், பூத பெருமாள் கோயில் தெரு, கஸ்தூரி பில்டிங்ஸ், அண்ணா சாலை பகுதி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பகுதிகள் மற்றும் அண்ணா நகர்/திருமங்கலம் பகுதிகளான மேட்டுக்குப்பம் ரோடு, கண்ணன் நகர், சீமாத்தம்மன் நகர், வானகரம் மேட்டுக்குப்பம், பாலமுருகன் நகர் மெட்ரோ ஜான் முழுவதும், டி.என்.எச்.பி குடியிருப்பு, காமராஜ் நகர், பெரியார் நகர் பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, அம்பத்தூர் பகுதிகளான ஒரகடம், மேனாம்பேடு, விஜயலட்சுமிபுரம், புதூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

electricity board,power supply,power outage ,மின்சார வாரியம் ,மின் விநியோகம் , மின் தடை

மேலும், தாம்பரம் பகுதிகளான அம்மன் கோயில் தெரு, வளையாபதி தெரு கடப்பேரி சங்கம் ரோடு, பிள்ளையார் கோவில் தெரு, பஜனை கோயில் தெரு சிட்லப்பாக்கம் வெங்கடேசன் தெரு, மகேஸ்வரி நகர், அண்ணா சாலை, புதுதாங்கல் லட்சுமிபுரம், விஷ்ணு நகர், ரத்னா நகர் அவென்யூ மாடம்பாக்கம் அகரம் மெயின் ரோடு, பாரதிதாசன் தெரு, செயலக காலனி பெருங்களத்தூர் கலைஞர் நெடுஞ்சாலை மற்றும் ஐ.டி காரிடர் பகுதிகளான தசரதபுரம் பகுதி, எம்.ஜி.ஆர் நகர், சூளைமேடு, ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், வடபழனி, துரைப்பாக்கம் கண்ணகி நகர், சிறுசேரி கிராமம், காரணை கிராமம். கே.கே நகர், வளசரவாக்கம் பகுதி, சாலிகிராமம், அசோக்நகர், க.க நகர், அழகிரி நகர் ஆகிய பகுதிகள்.

பின்னர், தண்டையார்பேட்டை பகுதிகளான நேதாஜி நகர், சிவாஜி நகர், அன்னை சத்யா நகர், துர்கா தேவி நகர், இந்திரா காந்தி நகர், திருவள்ளூர் குடியிருப்பு, எழில் நகர், மணலி சாலை, வி.ஓ.சி நகர், காமராஜ் நகர் மற்றும் தி நகர் பகுதிகளான கிரி ரோடு ஒரு பகுதி, வீராசாமி தெரு ஒரு பகுதி, வெங்கடாசலம் தெரு ஒரு பகுதி, தம்பையா ரோடு விரிவு பகுதி,ஆவடி/காமராஜ் நகர், ஸ்ரீனிவாசா நகர், அரவிந்த் நகர், அன்பு நகர், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :