- வீடு›
- செய்திகள்›
- சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
By: vaithegi Mon, 17 July 2023 10:03:35 AM
சென்னை: அமலாக்கத்துறையினர் காலை முதலே சோதனை நடத்த ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், குறிப்பாக எந்த இடத்தில் இந்த சோதனை நடைபெறும் என்பதை அமலாக்கத்துறை மிகவும் ரகசியமாக காத்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்பக்கத்திற்கு அமைந்து உள்ள உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாகத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காலை 7 மணி முதல் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை நடத்தி கொண்டு வருகிறனர்.
விழுப்புரத்தில் பதியப்பட்டு நிலுவையில் உள்ள ஒரு வழக்கு தொடர்பாக சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்துள்ளதா என்கிற அடிப்படையில் இச்சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிய வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக சென்னை சைதாப்பேட்டை, எழும்பூர், பெசண்ட் நகர் , விழுப்புரம் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வழக்கு தொடர்பாக சோதனை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
இதனை அடுத்து விழுப்புரம் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கும் பட்சத்தில், இந்த வழக்கு தொடர்பாக தற்போது சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருக்கிறதா என்கிற அடிப்படையில் அமலாகக்கத்துறை முதல் கட்ட சோதனையில் ஈடுபட்டு இருக்கிறது. தொடர்ந்து இவ்வழக்கு தொடர்பான மற்ற இடங்களிலும் சோதனை என்பது நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.