டிரான்ஸ்மீட்டரை பயன்படுத்தி தேர்வு எழுதியவர் சிக்கினார்
By: Nagaraj Sun, 27 Aug 2023 8:42:32 PM
கிருஷ்ணகிரி: டிரான்ஸ்மீட்டரை பயன்படுத்தி தேர்வு எழுதியவர்... கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடைபெற்ற உதவி காவல் ஆய்வாளர் பதவிக்கான தேர்வில் எந்திரன் திரைப்பட பாணியில் வாய்ஸ் டிரான்ஸ்மீட்டரை பயன்படுத்தி தேர்வு எழுதிய ஊத்தங்கரையை சேர்ந்த நவீன் என்ற நபர் சிக்கினார்.
3559 பேர் பங்கேற்ற இந்த தேர்வு, பொது அறிவு, மொழி திறன் என 2 தாள்களாக காலை மற்றும் பிற்பகல் நடைபெற்றது.
இதில் பொது அறிவு தேர்வில், சிம் கார்டு கொண்ட டிரான்ஸ்மீட்டரை ப்ளூடூத் மூலம் காதில் வைத்துக்கொண்டு நவீன் வினாக்களை சொல்ல, அவரது உறவினர் விடை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக நவீனை தேர்வறையிலிருந்து வெளியேற்றிய அட்கோ காவல்நிலைய போலீசார், நவீனுக்கு உதவிய நபர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர். நவீன் மற்றும் அவரது தங்கையிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.