Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வழிமுறைகளை பின்பற்றியே அரியர் தேர்வுக்கு விலக்கு வழங்கப்பட்டது; அமைச்சர் தகவல்

வழிமுறைகளை பின்பற்றியே அரியர் தேர்வுக்கு விலக்கு வழங்கப்பட்டது; அமைச்சர் தகவல்

By: Monisha Tue, 08 Sept 2020 10:26:15 AM

வழிமுறைகளை பின்பற்றியே அரியர் தேர்வுக்கு விலக்கு வழங்கப்பட்டது; அமைச்சர் தகவல்

அரியர் தேர்வு விலக்கு தொடர்பாக ஏ.ஐ.சி.டி.இ மற்றும் யு.ஜி.சி. வகுத்துள்ள விதிமுறைகளின்படியே முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

பேரறிஞர் அண்ணா வழியில் தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் எனும் இரு மொழிக் கொள்கையில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உறுதியாக இருந்தனர். எனவே தமிழகத்தில் எந்த சூழ்நிலையிலும் மும்மொழிக் கொள்கையை ஏற்கவே மாட்டோம். எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

அந்த உணர்வை யார் வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். அது அவரவர் ஜனநாயக உரிமை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தான் எதையும் செய்ய வேண்டும். இந்தியை எந்த நாளும் நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

d jayakumar,bilingual policy,rights,college,arrear exam ,டி ஜெயக்குமார்,இரு மொழிக் கொள்கை,உரிமை,கல்லூரி,அரியர் தேர்வு

கல்லூரிகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) மற்றும் பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) வகுத்துள்ள விதிமுறைகளின்படியே முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. மேற்கண்ட இரு அமைப்புகள் வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே அரசு அறிவிப்பு வெளியிட்டது.

தற்போது அரியர் மாணவர்கள் விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகிறது. இதுகுறித்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான கடிதமும் மேற்கண்ட கல்வி அமைப்புகளிலிருந்து கிடைக்கப் பெறவில்லை. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் எப்போது நடைபெறும்? எத்தனை நாள் நடைபெறும்? என்பது சபாநாயகர் முடிவுக்கு உட்பட்டது. அதுகுறித்த அலுவல் கூட்டத்தையும் சபாநாயகர் கூட்டியிருக்கிறார். எனவே உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|