Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த ரெயில் சேவை வருகிற 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிப்பு .. விவரம் உள்ளே

இந்த ரெயில் சேவை வருகிற 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிப்பு .. விவரம் உள்ளே

By: vaithegi Mon, 26 Sept 2022 07:36:31 AM

இந்த ரெயில் சேவை வருகிற 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிப்பு .. விவரம் உள்ளே

பெங்களூரு: தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவத உப்பள்ளி- ராமேஸ்வரம் இடையே இருமார்க்கமாக (வண்டி எண்:-07355/07356) வாராந்திர ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

உப்பள்ளியில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ரெயில் புறப்பட்டு சென்றது. இதனை அடுத்து இந்த ரெயில் சேவை 24-ந் தேதியுடன் (நேற்று முன்தினம்) நிறைவு பெற்றது. தற்போது இந்த ரெயில் சேவை வருகிற 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

rail service,bangalore ,ரெயில் சேவை,பெங்களூரு

ராமேசுவரம்-உப்பள்ளி இடையே வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கி வந்த ரெயில் சேவை நேற்றுடன் முடிந்தது. இந்த ரெயில் சேவையும் வருகிற 2-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 1-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இதுபோன்று சிவமொக்கா டவுன்-எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல் இடையே இயங்கும் ரெயில் (06223) வருகிற 2-ந் தேதி முதல் டிசம்பர் மாதம் 27-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-சிவமொக்கா டவுன் ரெயில் (06224) வருகிற 3-ந் தேதி முதல் டிசம்பர் 28-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது என தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.

Tags :