திமுக கோஷ்டி பூசலால் கடும் அதிருப்தியில் உள்ள நிதியமைச்சர்
By: Nagaraj Mon, 02 Jan 2023 5:49:56 PM
மதுரை: அமைச்சர் அதிருப்தி... மதுரை மாவட்ட திமுகவில் கோஷ்டி பூசல் உட்சக்கட்டத்தில் இருப்பதால் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக அமைச்சரவையில் நிதியமைச்சர் என்ற மிகப்பெரிய பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தாலும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை. அவர் வசம் இருந்த ஐடி விங் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது. தமிழக அரசில் முக்கிய பொறுப்பை அவர் வகிப்பதால் வேலை பளு காரணமாக பிடிஆர்-க்கு கட்சி பொறுப்பு கொடுக்கப்படவில்லை என்ற என்ற தகவல் வெளியானது.
இது ஏற்றுக் கொள்ளும்படி இருந்தாலும், அவரது ஆதரவாளர்களுக்கும் கட்சி பொறுப்பில் அதிமுக்கியத்துவம் கொடுக்காதது தான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், மாவட்ட செயலாளராக இருக்கும் கோ.தளபதிக்கும், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கும் இடையிலான உறவு சுமூகமாக இல்லை.