Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தான் தலைநகரில் முதல் இந்து கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது

பாகிஸ்தான் தலைநகரில் முதல் இந்து கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது

By: Karunakaran Thu, 25 June 2020 7:19:43 PM

பாகிஸ்தான் தலைநகரில் முதல் இந்து கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முதன் முறையாக இந்து கோவில் கட்டப்படவுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள எச்-9 பகுதியில் 20,000 சதுரடியில் கிருஷ்ணர் கோவில் கட்ட நேற்று அங்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பாகிஸ்தான் நாடாளுமன்ற செயலாளர் லால் சந்த் மால்கி ஆகியோர் இந்த அடிக்கல் விழாவில் கலந்து கொண்டனர்.

இஸ்லாமாபாத் இந்து பஞ்சாயத்து என்ற அமைப்பு சார்பில் இந்த கோவில் கட்டப்படவுள்ளது. ஸ்ரீ கிருஷ்ணா மந்திர் என இக்கோவிலுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரூ. 10 கோடியை இந்த கோவில் கட்ட பாகிஸ்தான் அரசு வழங்கியுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட லால் சந்த் மால்கி கலந்து கொண்டு பேசியபோது, இஸ்லாமாபாத்தில் இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்கள் தொகை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

pakistan,hindu temple,foundation,islamabad ,பாகிஸ்தான்,இந்து கோவில்,அடிக்கல்,இஸ்லாமாபாத்

மேலும் அவர், இஸ்லாமாபாத்தில் இந்து சமயத்தைப் பின்பற்றும் மக்களின் நீண்ட கால கோரிக்கை கோயில் கட்டுவது வழியாக நிறைவுற்றுள்ளதாகவும், 1947 ம் ஆண்டுக்கு முன் பாகிஸ்தானில் அமைந்திருந்த இந்து கோவில்களின் கட்டுமானத்தின்படியும் வடிவமைப்பின்படியும் புதிய இந்து கோவில் கட்டப்படும் எனவும் கூறினார்.

கோவில் மட்டுமின்றி, இந்து மக்கள் பயன்பாட்டுக்காக அவர்களுக்கு மயானமும் அமைக்கப்படும் என லால் சந்த் மால்கி தெரிவித்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டே இஸ்லாமாபாத்தில் இந்து கோவில் கட்ட நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் நடைமுறை காரணங்களுக்காக கோயில் அமைப்பது தள்ளி போனது குறிப்பிடத்தக்கது.

Tags :