- வீடு›
- செய்திகள்›
- ஆவின் மூலம் குடிநீர் விநியோகம் விரைவில் தொடக்கம் .. முதல் கட்டமாக சென்னையில் இந்த திட்டம்
ஆவின் மூலம் குடிநீர் விநியோகம் விரைவில் தொடக்கம் .. முதல் கட்டமாக சென்னையில் இந்த திட்டம்
By: vaithegi Sat, 20 Aug 2022 5:56:24 PM
சென்னை : தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் தயாராகும் ஐஸ்கிரீம், குல்பி, நெய், இனிப்பு ஆகியவைகள் அதிகளவில் விற்பனை ஆகின்றன. மேலும் தனியார் பால் நிறுவனங்களை விட விலை குறைவாகவும் தரம் மிகுந்ததாகவும் இருப்பதால் மக்கள் அதிகம் இந்த பாலையே உபயோகிக்கின்றனர்.
எனவே இந்நிலையில் ஆவின் மூலம் குடிநீர் விநியோகம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 23 ஆவின் மையங்களில் உள்ள சுத்திகரிப்பு குடிநீர் மையங்கள் வழியாக குடிநீர் பாட்டில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை அடுத்து தமிழகத்தில் தனியார் நிறுவனம் குடிநீர் பாட்டில் 1 லிட்டர் ரூ.20 க்கும், 1/2 லிட்டர் ரூ. 10க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஆவின் நிறுவனத்தில் தனியார் குடிநீர் பாட்டிலை மிக குறைந்த விலையில் விற்க உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் சா.மு.நாசர் முன்னிலையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
ஆவின் நிறுவனத்தின் வருவாயை உயர்த்தும் நோக்கில் குடிநீர் பாட்டில் திட்டத்தை முறையாக செயல்படுத்த எல்லா முயற்சிகளுக்கும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பொதுமக்கள் வசதிக்காக 3 அளவுகளில் ஆவின் குடிநீர் வழங்கப்பட உள்ளது. எனவே அதன்படி 300 மில்லி, அரை லிட்டர், ஒரு லிட்டர் ஆகிய அளவுகளில் குடிநீர் பாட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக சென்னையில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆவின் முடிவு செய்துள்ளது.