குற்றப்புலனாய்வு திணைக்கள முன்னாள் பணிப்பாளர் வைத்தியசாலையில் அனுமதி
By: Nagaraj Sun, 02 Aug 2020 7:02:39 PM
வைத்தியசாலையில் அனுமதி... சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர மஹர சிறைச்சாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
சுகயீனம் காரணமாகவே அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரென கூறப்படுகிறது.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர நேற்று முன்தினம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டு காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர கடந்த ஜனவரி மாதம், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி நீக்கப்பட்டு, காலி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பிரத்தியேக உதவியாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.