புற்றுநோயை கண்டறியும் கருவி வாங்கி தர முன்னாள் அமைச்சர் உறுதி
By: Nagaraj Mon, 10 July 2023 10:17:36 AM
குமாரபாளையம்: புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் கருவியினை வாங்குவதற்கு நிதியுதவி பெற்றுத் தரப்படும் என்று முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், குமாரபாளையத்தில் ஜவுளி உற்பத்தி ஆலைகளையும், சாய சலவை ஆலைகளையும் பிரிக்க முடியாது எனக் குறிப்பிட்டார்.
மேலும் சாய சலவை ஆலைகளால் புற்றுநோய் ஏற்படுவதாகத் தெரிவித்த அவர், அதனை முன்கூட்டியே கண்டறியும் கருவியை வாங்குவதற்கு தனியார் நிறுவன சமூக நல நிதியிலிருந்து நிதியை பெற்று தருவதற்கு உதவி புரிவதாக உறுதி அளித்தார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.. சாய சலை ஆலைகளால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உறுதிமொழியை மக்கள் வரவேற்றுள்ளனர்.